நடிகை பிரியாமணியை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. பருத்தி வீரன் படத்தில் ஒரு கிராம பெண்ணாக தன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பி இருப்பார். இந்நிலையில் இவரது வாழ்க்கையில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.
தமிழ் மொழி படங்களில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரியாமணி. இவர் தமிழ் ரசிகர்களுக்கு கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், நினைத்தாலே இனிக்கும், தோட்டா போன்ற பல படங்களில் நடித்தார். பிரியாமணி 2014ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது பிரியாமணிக்கு இரண்டாவது திருமணம். தற்போது பிரியாமணிக் கணவரின் முதல் மனைவி தன்னை என் கணவர் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்று புகார் அளித்துள்ளார். மேலும் பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட போது நீதிமன்றத்தில் தன் கணவர் பேச்சிலர் என கூறியதாகவும் ஆயிஷா குற்றச்சாட்டியுள்ளார்.
ஆயிஷா -முஸ்தபா ராஜ் இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பிரச்சனை பற்றி பிரியாமணி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்