சினிமாவில் மீண்டும் களமிறங்கும் அஜித்தின் மனைவி ஷாலினி.. எந்த படத்துலனு நீங்களே பாருங்க!!

0

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான அஜித் அவர்களின் மனைவி ஷாலினி. திருமணம் முடிந்தபின் நடிப்பிற்கு டாடா சொன்னவர் தற்போது மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சில படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் திரையுலகின் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷாலினி. அலை பாயுதே, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் என இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட் அடித்தன.

இவர் அமர்க்களம் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயம் நடிகர் அஜித்திற்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இவர் சினிமாவில் தலை காட்டாமல் விலகியே இருந்தார்.

தற்போது இவர் மீண்டும் திரைத்துறையில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம், அதுவும் ஷாலினி மணிரத்தனம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் தயராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது வரை ஷாலினி பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளது பற்றி படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here