விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் புது சென்னாகுளம் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 சவரன் நகை கொள்ளை அடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புது சென்னாகுளம் வந்துள்ளார். இந்நிலையில் எப்பொழுதும் போல குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நள்ளிரவு நேரத்தில் எதோ சத்தம் கேட்டு உள்ளது. இதையடுத்து அவர் போய் பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர்.
அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டபடி கொள்ளையர்களை துரத்தி சென்று உள்ளார். இதனை அடுத்து வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம நபர்கள் தப்பி சென்று உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் அலமாரியைத் திறந்து பார்த்த போது அதிலிருந்து 20 சவரன் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பிறகு ரமேஷ் அருகில் உள்ள காவல் துறையினரிடம் புகார் அளிக்க, காவல் துறையினர் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர். இது குறித்து அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்