இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 553 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் நாட்டில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டானது. தினசரி அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பான அறிக்கை மத்திய சுகாதார துறை அமைச்சகத்தினால் வெளியிடப்படுகிறது.
அதன்படி தற்போது மத்திய சுகாதார துறை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51,864 பேர் இந்த தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 553 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,03,281 ஆக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்