விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது தான் பாடிய ஒரு குத்து பாடலை பாடி அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் யார் இந்த பாடலை பாடியது ? என்ற கேள்வியை கேட்டு உள்ளார்.
விஜய் டிவி பல திறமைசாலிகளை உருவாகி உள்ளது . அந்த வரிசையில் வந்தவர் தான் டிடி. இவர் விஜய் டிவியின் பல ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார். இவர் காலகட்டத்தில் இவர் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சிகளே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு பின் அந்த இடத்தை பிடித்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே .
முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் பிரியங்கா. அதன் பின்னர் விஜய் டிவியின் ‘சினிமா காரம் காபி’ என்ற நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அதன் பின் அவரின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்றே சொல்லலாம். அதை தொடர்ந்து ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக் என பல நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கியவையே.
இவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக எடுத்து செல்வது, அனைவரையும் கலாய்ப்பது என இவரின் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் தான் பாடிய ஒரு குத்து பாடலை பாடி அதற்கு ஏற்றவாறு பாவனைகளை செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த இன்ஸ்டா பதிவில் இந்த பாடலை பாடியவர் யார் என்ற கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் ‘நீங்க தான் தலைவி’ என்பது போன்ற பதில்களை தெரிவித்து உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்