Don’t Worry மக்களே.. இனி தமிழர்களோட வேலை தமிழர்களுக்கு தான்!!!

0

இன்று 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. அதில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் பல அதிரடியான அறிவிப்புகளை தமிழக மக்களுக்காக அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்புகளுள் மிக முக்கியமானது மற்றும் மக்களை கவர்ந்த அறிவிப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் தமிழர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பதே. இது குறித்து ஆளுநர் கூறியதாவது, “தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதை இந்த அரசு உறுதி செய்யும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழர்களது வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பல குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. தற்போது உள்ள இந்த சூழலில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அவர்களின் இந்த அறிவிப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர். அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

இது தவிர மேலும் அவர், தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை அறிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here