இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த மௌவ்யா சூடான் என்பவர் 12வது பெண் போர் விமானியாக இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள லம்பேரி கிராமத்தைச் சேர்ந்த மவ்யா சூடான், இந்திய விமானப்படை பெண் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு முன்பாக 11 பெண்கள் இந்திய விமானப்படையில் பெண் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மௌவ்யா சூடான் இந்தியாவின் 12 வது பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவரை போல விமான லெப்டினன்ட்கள் அவனி சதுர்வேதி, பவானா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகியோர் ஜூன் 2016 இல் அடிப்படை பயிற்சி எடுத்துக்கொண்டதற்கு பிறகு இந்திய விமானப்படையின் முதல் மூன்று பெண் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு போர் விமானிக்கு பயிற்சி அளிக்க சுமார் ரூ .15 கோடி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்