பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன் தேவசகாயம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்துகொண்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பும் இருந்து வருகிறது. ஏனெனில் கண்ணம்மாவும், பாரதியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவு இருந்து வருகிறது.
பாரதி, வெண்பா, கண்ணம்மா, அகிலன் தவிர இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் உள்ளது. அது தான் துர்கா. கண்ணம்மாவை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி வந்தவர் தான் இவர். மேலும் கண்ணம்மாவை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் வெண்பாவை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் வெண்பாவை கடத்தியும் வைத்திருந்தார் துர்கா. அப்பொழுதே கையும் களவுமாக பாரதியிடம் மாட்டி விட்டிருக்கலாம் ஆனால் துர்கா அதை செய்யாமல் அசால்டாக இருந்ததால் வெண்பா அவரை அடித்து போட்டு தப்பித்து விட்டார்.
மேலும் அதன் பிறகு துர்கா என்ன ஆனார் என்று காட்டவும் இல்லை. இப்பொழுது கண்ணம்மா வேறு ஜெயிலுக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் கதையில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் துர்கா. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்