பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல கூடாது என்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார். மேலும் தற்போது ப்ரோமோ வேறு வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல கூடாது என்பதற்காக அனைவரையும் அவசர அவசரமாக அழைத்து கொண்டு வந்துள்ளார். இது எழிலுக்கு சந்தேகத்தை அதிகரிக்க தான் செய்கிறது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இங்கு அல்லி வீட்டிற்கு வர அனைவரும் ஒரே இடத்தில் தங்குகின்றனர். ஏற்கனவே இவர்கள் அனைவரும் உறவுக்காரர்கள் என்பதால் மேலும் நெருக்கத்துடன் பழகி வருகின்றனர். இந்நிலையில் தான் ராதிகா பாக்கியாவிற்கு கால் செய்து திங்கள் கிழமை பால் காய்ச்சுவதாக சொல்ல அதனை தன் கணவர் கோபியிடம் வந்து சொல்கிறார்.
மறுபடியும் இங்கிருந்து கிளம்பும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற பயத்தில் வேறு திட்டம் போடுகிறார். அதாவது மல்லி பிரஷாந்துக்கு ஐஸ்வர்யாவை கட்டிவைக்க நினைக்கிறார். இதனை கஸ்தூரியிடம் சொல்ல அவரும் மிகவும் சந்தோஷமடைகிறார்.
இது தான் சரியான நேரம் என்று நினைத்த கோபி அல்லியிடம் நாங்கள் இருக்கும்போதே நிச்சயத்தை வைத்து விடு எல்லாரும் கலந்துகொண்ட திருப்தி இருக்கும் என்று சொல்கிறார். இப்படி செய்தால் கண்டிப்பாக பாக்கியா ராதிகா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார் என்று நினைத்து கொள்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்