தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக, வரும் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேசிய கட்சி தலைவர்கள் பலரும், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பாஜக பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக நேற்று (ஏப்ரல் 9) சென்னை வந்தார்.
லோக்சபா தேர்தல் எதிரொலி.. திரையரங்குகளுக்கு இந்த தேதியில் விடுமுறை., திரைப்பட சங்கம் அறிவிப்பு!!
இதைத்தொடர்ந்து நாளை முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நெல்லையில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.