லடாக் மோதல் தொடர்பாக கிழக்கு லாடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – சீனா இடையேயான மோதல்..!
இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கிடையே கடந்த 15ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் இரு வீரர்களுக்கு இடையே கடுமையான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினர் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பரஸ்பர முடிவு…!
இந்நிலையில், இந்தியா – சீனா இடையே ராணுவ மேஜர் ஜெனரல் அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கி கொள்ள முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.