பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 24 மணிநேரமும் சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக 16,221 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுமென தமிழக அரசு அறிவித்திருந்தது.
முழுநேரமும் பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக இன்று திங்கள் கிழமை முதல் 13 ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது சென்னையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி 24 மணிநேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் அட்டைதார்களுக்கு கூடுதல் இணைப்பாக பனங்கருப்பட்டி – முதல்வர் அறிவிப்பு!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மாதவரம், கே கே நகர், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் சானிடோரியம், கோயம்பேடு ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையம் செல்வதற்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் புதன்கிழமை வரை கூடுதலாக 301 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.