தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று தீடிரென உயர்ந்து உள்ளது நகைபிரியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. மேலும் வரும் நாட்களிலும் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தங்க நகை விலை:
கொரோனா ஊரடங்கின் போது தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை போன்று, தங்கத்தின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வந்தது. இதற்கு காரணம் கொரோனா பாதிப்பு காரணமாக பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத அளவு சரிவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதனால் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பை பொருத்தும் தங்கத்தின் விலை வேறுபடுகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
உலக பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தாலும், அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
செப்.21 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.10 உயர்ந்து ரூ.4,907க்கும், ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து ரூ.39,256க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் பெரிதளவு மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.70.30 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,300 ஆக விற்பனை ஆகிறது.