தமிழகத்தில் பல மாவட்டங்களில் நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாத பொழுதும் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்த காரணத்தால் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது பல மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கியதால், அதன் தேவை அதிகரித்து விலையும் மறுபுறம் உயர்ந்து வருகிறது.
கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நிச்சயமாக நடத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!!
திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி கொலை விவகாரம் – 11 தனிப்படைகள் அமைக்க மாவட்ட எஸ்.பி உத்தரவு..!
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ஒரு கிராம் 19 ரூபாய் அதிகரித்து ரூ.4,461 க்கும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ. 37,128 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படாமல் கிராம் 53.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ. 53,600 விற்பனை செய்யப்படுகிறது.