திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி கொலை விவகாரம் – 11 தனிப்படைகள் அமைக்க மாவட்ட எஸ்.பி உத்தரவு..!

0

திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் தலைமையில் உத்தரவிட்டுள்ளார்.

9ம் வகுப்பு மாணவி கொலை விவகாரம்..!

திருச்சியில் சோமரசன்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியில் காணாமல்போன மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவர் மதியம் ஒரு மணி வரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்டது. ரொம்ப நேரம் ஆகியும் மாணவி வராததால் மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும் உறவினர்களும் தேடிவந்தனர்.

இந்நிலையில் மாணவியின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதியில் கிடந்ததாக கூறப்பட்டு மாணவியின் ஆடையை வைத்து அடையாளம் கண்டு கொண்ட பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வளர்த்த பெண் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பாச நாய்..!

இந்த வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் நேற்று 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இசசம்பவம் குறித்து சோமரசன்பேட்டை காவல் ஆய்வாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருச்சியில் 9 வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here