வளர்த்த பெண் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பாச நாய்..!

0

தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நாய் ஒன்று மாடியில் இருந்து குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாசமான நாய்..!

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் அனிதா ராஜ் சிங் 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரமாக நோய்வாய்ப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு கொண்டுவந்து பின்னர் நோயை குணப்படுத்தி தன்னுடன் பாசமாக வளர்த்தார். அந்த நாய்க்கு ஜெயா என பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி அனிதாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நாய் தற்கொலை..!

இதையடுத்து அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்த பாச நாய் என்ன செய்வதறியாமல் தவித்துள்ளது. பின்னர் வீட்டின் மாடிக்கு சென்று கீழே குதித்து தன் உயிரை விட்டது.

இது குறித்து அனிதாவின் மகன் தேஜாஸ் கூறுகையில், ஜெயாவை என் அம்மா குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார். அவரது உடல் வீட்டிற்கு வந்ததும் மாடிக்கு சென்ற ஜெயா கீழே குதித்தது. காயங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனை அழைத்து சென்றும் உயிரிழந்துவிட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here