நடிகரும் கவின் தனது சமூக வலைத்தளத்தில் அறந்தாங்கி சிறுமி கொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியாவை 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என திரைத்துறை பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
நடிகர் கவின் ட்வீட்..!
இந்த நிலையில் நடிகர் கவின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த கொலையை கண்டித்து பதிவு செய்துள்ளார்.
#JusticeForJeyapriya pic.twitter.com/aPTckJoHtH
— Kavin (@Kavin_m_0431) July 3, 2020
இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும் இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா என்று பதிவு செய்துள்ளார் கவினின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.