வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 40 ஆயிரத்தை தாண்டியது!!

0

தமிழகத்தில் இன்று மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை 900 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தங்கத்தின் விலை:

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருமானம் இன்றி குறைந்த செலவுகளில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தவர்கள் இந்த விலை உயர்வால் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். இன்று சென்னையில் காலை சவரன் 592 ரூபாய் அதிகரித்து இருந்தது ஆபரணத் தங்கம்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 109 ரூபாய் அதிகரித்து சவரன் 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,013 ஆக உள்ளது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு அதன் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதே காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்பதால் முதலீட்டாளர்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here