கொரோனா நோய் பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மாணவர்கள் அளித்த மனுவின் பெயரில் யூஜிசி அமைப்பிடம் கேட்டுக்கொண்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பரவல் மக்கள் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவலை அடுத்து, நாடு அனைத்திலும் உள்ள பள்ளிகள்மற்றும் கல்வித்துறைக்கு சார்பில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு “ஆல்-பாஸ்” என்று கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால், யூஜிசி அதற்கு ஒப்புதல் அளிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால், பல சிக்கல்கள் உண்டாகலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், பல மாணவர்கள், உச்சநீதிமன்றத்திற்கு மனு அளித்தவண்ணம் இருந்து வந்தனர்.
பலருக்கு “நோய் தொற்று”:
பெரும்பாலோனோர், கூறியதாவது, தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால் தேர்வு எழுதாத சூழ்நிலை உள்ளது என்றும், சிலர் தங்கள் குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தேர்வு எழுத முடியாது என்று மனு அளித்து இருந்தனர். இது போன்ற மனுக்கள் 13 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – அமைச்சர் அறிவிப்பு!!
இப்படியான சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் யூஜிசி அமைப்பிடம் தெரிவுகளை ரத்து செய்வது குறித்து கேட்டுவந்தது. அதற்கு யூஜிசி 818 பல்கலைக்கழகங்களில் 209 இல் தேர்வுகள் நடத்தி முட்டிக்கப்பட்டது எனவும், இன்னும் மீதம் இருப்பவைகளுக்கு செப்டம்பர் 30 க்குள் நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு வரும் ஜூலை 30 ஆம் தேதி நீதிபதி அசோக் பூஷன் அவர்களால் வீடியோ கான்பிரென்ஸ் மூலமாக நிகழ உள்ளது. யூஜிசி சார்பாக துஷார் மெஹத ஆஜராக உள்ளார்.
Pls DDE all exam cancel plssss cov19my pls TN full increase students life pls sir