மும்பையில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் ஆங்க்ரே கப்பலில் உள்ள இந்திய கடற்படையின் 20 மாலுமிகள் உட்பட 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
எண்ணிக்கை உயரக்கூடும்..!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் தான் அதிகமாக 3320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 14 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆனால் ஒரு குட் நியூஸ்..!
இந்த நிலையில் கடற்படை மாலுமிகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதிக்கப்பட்ட கடற்படையினரின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. சோதனை வந்த பிறகு பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
பரிசோதிக்க முடிவு..!
மேற்கு கடற்படை டிப்போவான ஐ.என்.எஸ் ஆங்கரின் குடியிருப்பு வீட்டு வசதி பகுதியில் இந்த மாலுமிகள் தங்கியிருந்தனர். மும்பை லாக்டவுன் நிலையில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த கடற்படை குடியிருப்பு பகுதிக்குள் யார் யார் வந்து சென்றார்களோ அவர்களை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |