கொரோனாவிற்கு எதிராக மேலும் இரண்டு புதிய மருந்துகள் – நிம்மதியில் மக்கள்!!

0

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனாவிற்கு எதிரான மருந்தினை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா மருந்து:

கடந்த ஆண்டு முதல் அனைத்து உலக நாட்டிலும் கொரோனா என்னும் கொடிய வகை உயிர்கொல்லி நோய் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியும் இந்த வைரஸ் தொற்று எந்த பகுதியிலும் கட்டுக்குள் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. இந்நிலையில் அனைத்து உலக நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் இருக்கும் பெர்கோபர் மருத்துவ ஆய்வு நிறுவனம் இரண்டு புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால்  தீவிர பாதிப்பில் இருந்து அவர்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘அந்த மனசு தாங்க கடவுள்’ – சமூக பணியில் மா கா பா ஆனந்த்!!

அதுமட்டுமல்லாமல் இந்த மருந்து கொரோனா வைரஸை மையமாக கொள்ளாமல், கொரோனாவிற்கு எதிராக போராடும் மனிதர்களின் செல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தினை சாதாரண வெப்பநிலையில் வைத்திருந்தால் போதும் என்றும் ஆரம்பகட்ட சோதனை பாசிட்டிவாக வந்துள்ளது என்றும் மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் மக்கள் மத்தியில் சற்று நிம்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here