கொரோனா தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தடுப்பூசியில் குளறுபடி ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசியில் குளறுபடி:
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவ்வாறு மக்கள் பரவலாக தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலையில் உத்தரபிரதேசத்தில் முதலில் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் கொடுக்கப்பட்டு பின் இரண்டாவது டோஸாக கோவாக்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 20 பேருக்கு இப்படி வேக்சின் மாற்றி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இந்த தவறு நேர்ந்துள்ளது. இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.