2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை – உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!!

0
பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவின் முக்கிய நகரம் - வெளியான ஷாக் அறிக்கை!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்தால், இன்னும் மக்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டுகொள்வதில்லை என பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மீண்டுமாக உத்திரபிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்காக, புதன்கிழமை கடைக்கு சென்றுள்ளனர். கடைக்கு சென்ற மூன்று பெண்களும் மாலை வரை வீடு திரும்பாததினால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.

‘எனக்கு கட்டும் கோவில் இப்படி இருந்தால் சந்தோஷப்படுவேன்’ – நிதி அகர்வால் கோரிக்கை!!

இந்நிலையில் மூன்று சிறுமிகளும் தங்களது சொந்த வயலில், துப்பட்டாவால் வாயில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த மூன்று பெண்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் ஒரு பெண் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

minor rape case
minor rape case

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கும் 13,16,17 வயதே ஆகும். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களை கடவுளாகக் கருதும் இந்த நாட்டில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here