தற்போது சென்னையில் வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்க பட்டு நடந்து வருகிறது. இதில் ஐபிஎல் போட்டியில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜனுக்கு புகழாரம் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல்:
இந்தியாவில் வைத்து இன்னும் ஒரு சில மாதங்களில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மெகா ஏலத்தை நடத்த கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தற்போது மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவை இல்லாத வீரர்களை விடுவித்து வந்தனர். மேலும் ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்ய அனைத்து அணிகளும் ஆர்வமாக இருந்து வந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இன்று சென்னையில் வைத்து மினி ஏலம் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து இந்திய அணிக்கு சென்ற நடராஜனுக்கு புகழாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். தற்போது மினி ஏலம் தொடங்கி மிக மும்மரமாக நடந்து வருகிறது.
புதுக்கோட்டை சிறுவன் பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!
இதில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் அங்கு கொரோனாவிற்கு எதிரான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
இவரை டெல்லி அணி நிர்வாகம் ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை தொடர்ந்து மேக்ஸ்வெல்லை பெங்களூரு அணி ரூ.14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் ஜேசன் ராய், ஆரோன் பின்ச், ஹேல்ஸ், ஏவின் லூயிஸ் மற்றும் விஹாரி ஆகிய வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.