ஐபிஎல்லில் தோனி இணைந்து 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதனை ஒரு விழாவாக கொண்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனி:
எதிர்வரும் ஐபிஎல் தொடரை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பதற்கு இரண்டு காரணங்களை முக்கியமாக கூறலாம். ஒன்று, ஐபிஎல்லின் 16வது சீசன்னை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பில் போட்டி நகரும். மற்றொரு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியின் ஆட்டத்தை பார்ப்பதே ஆகும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த 2019ம் ஆண்டே சர்வதேச அணியில் இருந்து, ஓய்வு பெற்ற இவர், கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ஐபிஎல் லீக் தொடரில் மட்டுமே தனது பங்களிப்பை அளித்து வருகிறார். சர்வதேச அளவிலான பல கோப்பைகளை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர், ஐபிஎல்லிலும், CSK அணி 4 முறை பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு முதல், தோனி CSK அணிக்காக தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இதன் மூலம், 15 ஆண்டுகளை ஐபிஎல்லின் CSK வில் தோனி நிறைவு செய்துள்ளார். இதனை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மார்ச் 25ஆம் தேதி விழாவாக கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.