ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு.., கூட இருந்தே குழி பறித்த டிரைவர்,சமையல்காரி.., காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

0
ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு.., கூட இருந்தே குழி பறித்த டிரைவர்,சமையல்காரி.., காவல்துறை அதிரடி நடவடிக்கை!!
ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு.., கூட இருந்தே குழி பறித்த டிரைவர்,சமையல்காரி.., காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு போன நகைகளை காவல்துறை மீட்டு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். மேலும் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து 60 பவன் காணாமல் போய் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்த பேரில் காவல்துறை தங்களது விசாரணையை தொடங்கி, ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த சாந்தி என்ற பெண் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்த போது இந்த திருட்டில் கார் ஓட்டுநர் வெங்கடேசனும் உடந்தை என தெரிய வந்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகளை காவல்துறை மீட்டு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு…, டாப் 10 யில் மூன்று இடத்தை தக்கவைத்த இந்திய வீரர்கள்!!

அதாவது, ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை பார்த்த சாந்தி எடுத்த 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவை அவரிடம் இருந்து காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here