நாடு முழுவதும் நாளை 75 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு டெல்லி,சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட 77 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை மெரினாவிலும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நாளை ஆளுநர் RN ரவி சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.