பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் தாக்கலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொருளாதார அடிப்படையில் மாநிலங்களுக்கு, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இதில், அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு வெளியாகும் என பெரும் அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆலோசனை நடத்த நிதிச் செயலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அடக் கொடுமையே., தேன்நிலவுக்கு கோவா கிளம்பிய ஜோடி., கணவன் செயலால் டைவர்ஸ் கேட்ட மனைவி!!