இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்பு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். இதில் என்ன கொடுமை என்று பார்த்தால் திருமணமாகி கொஞ்ச நாட்களிலே ஒரு சில ஜோடி விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. அந்த வகையில் இப்போது போபாலை சேர்ந்த ஒரு ஜோடி தேன் நிலவுக்காக கோவா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அந்த நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதால் அந்த பையனின் அம்மா அங்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். உடனே கோவா செல்லும் பிளானை தவிர்த்து அந்தப் பையன் மனைவி மற்றும் தாயை ராமர் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.