இன்றைய நவீன காலகட்டத்தில் இன்டர்நெட் சேவை என்பது அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு தரமான இன்டர்நெட் சேவைகளை வழங்குவதில் இந்தியாவை பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் முன்னிலை காட்டி வருகிறது. அந்த வகையில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் தங்களுக்கு தகுந்த நெட்வொர்க்கில் ரீசார்ஜ் திட்டங்களை ஆக்டிவேட் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அளித்து வருகிறது.
அந்த வகையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களை ஆக்டிவேட் செய்து கொள்கின்றனர். இன்னும் பலர் 90 நாள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி இந்த 90 நாள் ரீசார்ஜ் திட்டத்தில் 749 ரூபாய் செலுத்தி நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் & எஸ்எம்எஸ்கள் இன்னும் இதர வசதிகளுடன் கூடிய இந்த பிளானை ஆக்டிவேட் செய்து கொள்கின்றனர். இதே போல ஏர்டெல் நிறுவனமும் 90 நாட்களுக்கு ரூபாய் 779 செலுத்தி நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் இன்னும் பல கூடுதல் சலுகையும் கொடுத்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
குடியரசு தின விழா எதிரொலி.., இந்த பகுதியில் 14,000 போலீசார் குவிப்பு.., வாகன ஓட்டிகள் அவதி!!!