இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர் . அதன் பிறகு களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் பொறுப்பாக விளையாடினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உட்பட 70 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து நாளை (ஜனவரி 26) 2 ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகர் பாபி சிம்ஹா.. நீதிமன்றம் நோட்டீஸ்.. முழு விவரம் உள்ளே!!