சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் தான் பாபி சிம்ஹா. இவர் தனது பெற்றோருக்காக கொடைக்கானலில் வீடு கட்டி வந்தார். அப்பொழுது ஒப்பந்ததாரர்கள் பணத்தை ஏமாற்றி விட்டதாக காவல்துறையிடம் புகார் கொடுத்து இருந்தார். தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கட்டுமான ஒப்பந்ததாரர் உடனான பிரச்சினையில் தன்னையும், தனது தந்தையையும் நடிகர் பாபி சிம்ஹா மிரட்டியதாக, உசேன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரி அதில் இணைத்துள்ளார். இதை விசாரித்த சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நடிகர் பாபி சிம்ஹா-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!