மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலமே சிதைந்தது. மேலும் இந்த வன்முறையால் பல பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். மேலும் அங்கு பயிலும் பள்ளி மாணவிகளும் இந்த கலவரத்தால் மிகவும் சிரமப்பட்டனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் ஏழு மாதங்கள் கடந்தும் இன்னும் அங்கு வன்முறை சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் நேற்று 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்முறை குறித்து போலீசர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!