தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படட்டு உள்ளது.
எப்போ ரிசல்ட் வரும்.?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு நடைபெற்ற பொழுதே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வு நடைபெற்று முடிந்தது.
ஏற்கனவே +2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31ம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்ட விட்டது. அதற்கடுத்து ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டு ஊரடங்கு உத்தரவால் அதுவும் தள்ளிவைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் +2 விடைத்தாள் திருத்துவதற்கான பணிகள் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்து விட்டது. எனவே ரிசல்ட் வர தாமதமாகும் என தெரிகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |