4ம் வகுப்பு தேர்வெழுதி 74.5% மதிப்பெண்கள் பெற்ற 105 வயது பாட்டியம்மா..!

1

கேரள மாநிலம் திரிக்கருவா பகுதியைச் சேர்ந்த 105 வயது நிரம்பிய பாஹிரதி அம்மா என்ற பெண்மணி புதிய சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் 4ம் வகுப்பிற்கு சமமான தேர்வெழுதி அதி 74.5% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மாற்றுக்கல்வி திட்டம்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

கேரள மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு உள்ள புதிய மாற்றுக்கல்வி திட்டத்தின் படி கல்வி பயில வாய்ப்பிழந்தோர், அந்தந்த வகுப்புகளுக்கு இணையான படிப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். இந்நிலையில் கடந்த ஆண்டு 4ம் வகுப்பிற்கு இணையான சமச்சீர் தேர்வும் நடைபெற்றது.

இந்த தேர்வில் 20 ஆயிரம் பேருடன் 105 வயது நிரம்பிய பாஹிரதி அம்மா என்ற பெண்மணியும் கலந்து கொண்டு தேர்வெழுதினார். இந்த தேர்வின் முடிவுகள் புதன் கிழமை வெளியான நிலையில் பாஹிரதி அம்மா 74.5% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

எழுத்தறிவு இயக்ககத்தின் நல்லெண்ண தூதர்..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

திரிக்கருவா பஞ்சாயத்து தலைவர், பாஹிரதி அம்மாவின் வீட்டிற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி மதிப்பெண் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், கேரள எழுத்தறிவு இயக்ககத்தின் நல்லெண்ண தூதராக பாஹிரதி நியமிக்கப்பட உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here