சென்னையை அடுத்து உள்ள SRM கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளே கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
பிப்ரவரி 4 நேற்று மாலை கல்லூரி கேன்டீனிற்குள் மாணவர்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. எம்பிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு உள்ளேயே கடுமையாக மோதிக் கொண்டனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த சண்டையில் ஈடுப்பட்டனர்.
ஒரு புறம் துப்பாக்கி, மறுபுறம் கத்தி..!
இரண்டு குழுவாக சண்டையிட்டுக் கொண்ட மாணவர்கள் ஒரு குழுவினர் கையில் துப்பாக்கி உடனும் இன்னொரு குழுவினர் கையில் பட்டாக்கத்தி கொண்டும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். காலேஜ் கேன்டீனில் நடந்த இந்த சண்டையால் சக மாணவர்களும், ஊழியர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தை அக்கல்லூரி மாணவர் தனது போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
போலீசார் தீவிர விசாரணை..!
SRM தனியார் கல்லூரியின் பேருந்துகளுக்கு மர்மநபர்கள் தீவைப்பு..? பேருந்துகள் எரிந்து நாசம்..!
இதனால் அதிர்ச்சி அடைந்த வண்டலூர் போலீசார் மற்றும் துணை எஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காலேஜ் சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்ற தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த காலேஜில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
துப்பாக்கி எப்படி..?
செங்கல்பட்டு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் சகஜமாக இங்கு படிக்கும் மாணவர்கள், ரவுடிகளிடம் நிறைய காணப்படுகிறது. இதனால் பிள்ளைகளை காலேஜிற்கு அனுப்பும் பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளனர். இது குறித்து விரைவில் விசாரணை நடத்தி தீர்வு காணுமாறும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |