நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கிராமப்புற மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு தினமும் 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதை உயர்த்தி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி “நாங்கள் இந்தியாவில் ஆட்சி அமைத்தால் இனி 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு தினக்கூலியாக 400 ரூபாய் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.