தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி 2024 ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும், ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
100 நாள் வேலை திட்டம்.., இனி தினக்கூலியாக 400 ரூபாய் வழங்கப்படும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!