தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிய இருக்கும் நிலையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.