தமிழக ஆசிரியர்கள் போராட்டம்…, அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை…, வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக ஆசிரியர்கள் போராட்டம்..., அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை..., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக ஆசிரியர்கள் போராட்டம்..., அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை..., வெளியான முக்கிய தகவல்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை வளாகத்தில் கடந்த ஒரு வார காலமாக நியமன தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துதல், பணி நிலைப்பு வழங்குதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், போராட்டம் நடத்திய ஆசிரியர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசின் இத்தகைய செயல், மற்ற அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராடிய ஆசிரியர்களை கைது செய்தது தமிழக அரசின் ஜனநாயக விரோத செயல் என வன்மையாக கண்டித்துள்ளனர்.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here