கேரளாவில் பரவலாக காணப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை கொரோனா தொற்று ஆட்டி படைத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே ஜிகா வைரஸும் அம்மாநிலத்தில் எக்கச்சக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்டை மாநிலம் என்பதால் ஜிகா வைரஸ் வராமல் இருக்க தமிழக அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேரளாவில் முதல் முறையாக கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கன்குனியாவை பரப்பும் கொசுவால் தான் இவ்வைரஸ் ஏற்படுகிறது. தற்போது இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் புனே நகரில் 50 வயது பெண் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் மத்திய குழு சென்று ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் புனேவில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு மகாராஷ்டிராவிற்கு உயர்மட்ட குழுவை மத்திய அரசு தற்போது அனுப்பியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்