ஐபிஎல் தரும் பணம் இளம் வீரர்களை திசை திருப்புவதாக கூறி அவர்களை விமர்சித்தும் மேலும் மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும் யுவராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
திசை திருப்பும் ஐபிஎல்..!
ஐபிஎல் நிறைய பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை மாற்றி விடுகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல்-இல் தான் உள்ளது. அவர்கள் தங்கள் மாநிலங்களுக்காக உள்ளூர் தொடரில் ஆட விரும்பவில்லை.
ஐபிஎல் தொடர் வந்த பின் சில இளம் வீரர்கள் உள்ளூர் தொடர்களான ரஞ்சி ட்ராபி ஆகியவற்றில் ஆடுவதைக் காட்டிலும் ஐபிஎல் தொடரில் ஆடுவதையே பெரிதாக கருதி வருகின்றனர். இப்போது உள்ள வீரர்கள் இல்லை. அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறார்கள்.
மரியாதையை இல்லை – யுவராஜ் குற்றச்சாட்டு..!
இளம் வீரர்களுடன் பேசிய வரையில் அவர்கள் மூத்த வீரர்களுக்கு இன்னும் மரியாதை அளிக்கலாம் என தோன்றுகிறது. நாங்கள் எங்கள் மூத்த வீரர்களுக்கு அளித்தது போல அவர்கள் மரியாதை அளிக்கவில்லை.
மூத்த வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் நமக்கு நிறைய கற்றுத் தந்தவர்கள் என யுவராஜ் சிங் இளம் வீரர்கள் தவறை சுட்டிக் காட்டினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |