யூடியூப் பிராங் வீடியோ எடுப்பவர்கள் கைது – சேனலை முடக்க கோரிக்கை! காவல் நிலையத்தில் அதிரடி புகார்!!

0
யூடியூப் பிராங் வீடியோ எடுப்பவர்கள் கைது - சேனலை முடக்க கோரிக்கை! காவல் நிலையத்தில் அதிரடி புகார்!!

சென்னையில் யூடியூப் பிராங்க் என்ற பெயரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சேனல்களை முடக்கி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார்:

சமூக வலைதளங்களில், மக்கள் அதிகம் விரும்பும் தளமான யூடியூப்பில் நாள்தோறும் புதுப்புது  வீடியோக்கள் அப்டேட் ஆகி வருகிறது. சமூகத்துக்கு பயன் தரும் பல வீடியோக்கள், இதில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், ஒரு சில வீடியோக்கள் பொது மக்களுக்கு அச்சம் தருபவையாக இருந்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில், சென்னையில், பிராங்க் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சேனல்கள்  சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெண்கள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம்  பிராங்க் வீடியோ போடுபவர்களின் சேட்டைகள் அத்துமீறி விட்டதாகவும், இதனால் பலருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையரகத்தில்  புகார் அளித்துள்ள ரோஹித் என்பவர், தமிழ் கலாச்சாரத்திற்கு சீரழிவு ஏற்படுத்தும் இந்த  பிராங்க் வீடியோ போடும் சேனல்களை முடக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட யூடியூப் வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here