கவனக்குறைவால் பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட இளம் தம்பதி உயிரிழப்பு – அரக்கோணத்தில் சோகம்..!

0

ரக்கோணம் சேர்ந்த இளம்பெண் பூச்சி மருந்தைக் கோதுமை மாவு என நினைத்து, அதில் போண்டா போட்டுச் சாப்பிட்டு உயிர் இழந்தார்.

அரக்கோணம் இளம்பெண் மரணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது எஸ்.ஆர். கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. மகன் சுகுமார, மருமகள் பாரதி, மனைவி லட்சுமி ஆகியோருடன் வசித்து வருகிறார். தனது மிளகாய் தோட்டத்திற்கு தெளிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வர சென்றுள்ளார் அப்பொழுது மருமகள் போண்டா செய்வதற்காக மாமனார் பெரியசாமியிடம் அதற்கான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வர சொல்லியுள்ளார்..

மைதாவையும் பூச்சி கொல்லி மருந்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு வந்த பெரியசாமி, வீட்டில் யாரிடமும் பூச்சி மருந்து குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் வீட்டில் கோதுமை மாவையும் பூச்சி மருந்தையும் வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மருமகள் பாரதி, போண்டா தயாரிக்கும் போது, பூச்சிக் கொல்லி மருந்தையும் மாவு என நினைத்து கலந்து போண்டா செய்துள்ளார். பிறகு, பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சுகுமார், மருமகள் பாரதி என அனைவரும் சாப்பிட்டுள்ளனர். பூச்சி மருந்து வாடை வருவதுபோல் இருக்கிறது அதையும் சேர்த்துக் கலந்து செய்துவிட்டிர்களா எனக் கேள்வி கேட்டுள்ளார்.

பெரியசாமி சிறிது நேரத்தில்  குடும்பத்தார் அனைவருக்கும் உடல்நிலை மோசமாகி வாந்தி மயக்கம் எடுத்துள்ளார்கள்.உடனே பெரியசாமி அருகில் இருந்தவர்களின் உதவியோடு குடும்பத்தார்களை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளம்பெண் பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமிக்கும், மகன் சுகமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது சிறிய கவனக் குறைவு காரணமாக இளம் பெண் உயிரிழந்த நிகழ்வு அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here