நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சனி கிழமை மிக மோசமான விபத்திற்கு உள்ளானது நம் அனைவருக்கும் தெரியும். அவரது தோழியான பவானி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாஷிகாவிற்கு இடுப்பில், காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவர் தங்கை கூறி இருந்தார். நினைவு திரும்பிய பின் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் தான் கார் ஒட்டி சென்றது உறுதி ஆகியுள்ளது.
யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்து மேலும் போலீசார் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரின் நெருங்கிய தோழி யாஷிகாவின் தற்போதய நிலை பற்றி கூறியுள்ளார்.
அதாவது யாஷிகா தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் யாஷிகா உடல் நிலை தேறிய பின் விபத்து குறித்த விரிவான விசாரணை நடைபெரும் எனவும் யாஷிகாவின் தோழி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்