மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதலில் ராணா தன்கட் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவபலனின்றி உயிரிழந்துள்ளார். ராணா தன்கட் தாக்கப்படும் வீடியோ வைரல் ஆகி வருகிறது
மல்யுத்த வீரர் மரணம் :
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார். இவருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக வாக்குவாதங்கள் இருந்துவந்த நிலையில் சமீபத்தில் ராணா தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினர்.
தரையில் விழுந்துக் கிடக்கும் ராணா தன்கட்டை சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் சூழ்ந்து நின்று கொண்டு சரமாரியாக தாக்கியதில் கடுமையான காயமடைந்த ராணா தன்கட்டை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மருத்துவ பலனின்றி உயிரிழந்தார். ராணா தன்கட் மரணத்தை தொடர்ந்து சுஷில் குமார் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்து தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விசாரணையின் போது சுஷில் குமார் கூறியதாவது , “ராணா தன்கட்டுக்கு பாடம் கற்பிக்கவே நினைத்தோம் , அவரை கொலை செய்யும் எண்ணம் எனக்கில்லை” என அவர் கூறினார். தற்போது ராணா தன்கட்டை சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.