ஏமாற்றமே!! விடியற்காலை 4 மணிக்கு எழுந்தது எல்லாம் வீண்..! இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது (இந்திய நேரப்படி). ஆர்வத்துடன் போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், இந்திய அணியின் சுமாரான பேட்டிங்கால் அனைத்து ரசிகர்களும் மூட் அவுட் ஆகினர்.

கோஹ்லியின் மாஸ்டர் பிளான் வீண்..!

ஒருநாள் தொடரில் பெரிய அடி வாங்கிய இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அதை திருப்பிக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். விராட் கோஹ்லியும் அணியில் பல மாற்றங்களை செய்தார். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அணியில் விக்கெட் கீப்பராக சஹாவிற்கு பதிலாக அனுபவமில்லாத ரிஷப் பண்ட நியமிக்கப்பட்டது அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது.

மேலும் அணியில் ஒரே சுழற்பந்து வீச்சாளர் ஆக அஸ்வின் இடம் பெற்று இருந்தார். ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடக்கம் சொதப்பல்..!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரிதிவி ஷா (16), அகர்வால் (34) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா (11) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் விராட் கோஹ்லியும் 2 ரன்னில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 88 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து விஹாரி (7) கேட்ச் ஆனார்.

இந்திய அணியில் ரஹானே (38), பண்ட (10) களத்தில் உள்ளனர். 55 ஓவரில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூஸிலாந்து அணி சார்பில் ஜேமிசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here