தீவிர சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பதற்காக டெக்சாமெத்தசோன மருந்தை அதிகளவில் தயாரிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தடுப்பு மருந்துக்கு போராடும் பல்வேறு நாடுகள்..!
கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் பல்வேறு நாடுகளும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சிகள் கடந்த 6 மாதங்களாக உலக ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். கொரோனாவை முற்றிலும் தட்டுப்பதற்கான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இறப்பை குறைக்கும் டெக்சாமெத்தசோன மருந்து..!
கொரோனா வைரஸுக்கு ஆயுர்வேத மருந்து ‘கொரோனில்’ – பாபா ராம்தேவின் பதஞ்சலி அறிமுகம்!
இந்நிலையில், தீவிர பாதிப்பியுள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பதற்காக ஆஸ்துமா, நுரையீரல் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன மருந்து 35 சதவீதம் அளவிற்கு இறப்பை குறைந்துள்ளதாக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், டெக்சாமெத்தசோன மருந்தை அதிகளவில் தயாரிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.