நாளை நடக்க உள்ள உலக கோப்பை T20 போட்டியில் மோதவுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளில் எந்த அணி வெற்றி பெற உள்ளது என்ற கணிப்பை பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ளார்.
யாருக்கு வெற்றி:
கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர் நோக்கும், 2021ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது. இந்த போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி நாளைb களம் இறங்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கணிப்பை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வெளியிட்டு உள்ளார்
.
அதாவது, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்த கருத்து கணிப்பு கட்டுரையை வெளியிட்டார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் அதிக ரன்களை குவிப்பார் என்றும், முகமது சமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றும் தெரிவித்துள்ளார். இவரது கருத்து கணிப்பை வைத்து பார்க்கும்போது இந்திய அணி இந்த போட்டியில் வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்