நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு “லக்பதி திதி” எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு வணிகம், சந்தைப்படுத்தல், ஆன்லைன் பேங்க் போன்ற பயிற்சிகள் மட்டுமல்லாமல் சொந்தமாக சிறுதொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனும் வழங்கப்படுகிறது.
இதற்கு 18 முதல் 50 வயது, சுய உதவிக் குழு உறுப்பினர் போன்ற தகுதிகளையும் நிர்ணயித்துள்ளனர். தகுதியுடையவர்கள் ஆதார், பான் கார்டு, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை கொண்டு மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அதன்படி இத்திட்டத்தில் இதுவரை 9 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
WPL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய RCB …, வரலாறு படைத்து அசத்தல்!!